lyrics
வாழ முடியுமா... சொல்லுங்க இயேசுவே (2)
இந்த மாய உலகத்தில் - இந்த
ஏழை என்னாலயும் வாழ முடியுமா?
பதில் சொல்லுங்க இயேசுவே...
நீங்க சொல்லுங்க இயேசுவே!
சொல்லுங்க இயேசுவே... நீங்க சொல்லுங்க இயேசுவே!
சொல்லுங்க இயேசுவே... பதில் சொல்லுங்க இயேசுவே!
என்னவென்று நான் சொல்லுவேன்? எப்படிப் பாடுவேன்?
என் கதையை யாரிடம் கூறுவேன்?
பாட்டினாலே என் குறைகளைச் சொல்லுகிறேன்
கண்ணீரினால் என் வரிகளை எழுதுகிறேன்!
ஊரார் கேலியும்... உலகின் ஏளனமும்...
என்னை வாட்டி வதைக்குதே!
ஆசைப்பட்டதை அடைய முடியல - என்
வாழ்க்கை கசப்பாய் மாறுதே!
சொல்லுங்க இயேசுவே... நீங்க சொல்லுங்க இயேசுவே!)
கற்சாடித் தண்ணீரை இரசமாய் மாற்றினீர்
கசப்பான மாறாவை இனிப்பாய் மாற்றினீர்!
ஏழை என் வாழ்வும் மதுரமாய் மாறுமோ?
கசப்பான வாழ்வும் இனிமையாகுமோ?
தத்தளிப்பின் பாத்திரம் நீக்குவேன் என்றீர்
சுகவாழ்வு மீண்டும் துளிர்க்கும் என்றீர்!
"உன்னையும் ஆசீர்வதிப்பேன்" என்றீரே
உம்மைத் தான் நம்புகிறேன் ஆண்டவரே!
சொல்லுங்க இயேசுவே... நீங்க சொல்லுங்க இயேசுவே!)
மேய்ப்பராய் நீர் முன்னால் நடக்கையிலே - எனக்கு
குறைவுகள் ஒன்றும் இல்லையே!
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருதே
என் வாழ்நாள் முழுவதும் இயேசுவே!
உம்மை நோக்கிப் பார்த்தேன் - நான்
வெட்கப்பட்டுப் போகவில்லை!
எதிரிகள் முன்னே என்னை உயர்த்தினீரே
என் கண்ணீரைத் துடைத்து அணைத்தவரே!
நான் வாழ்கிறேன்... என் இயேசுவாலே! (2)
யாவும் எனக்காய் தந்தவரே!
செழித்தோங்கச் செய்தவரே!
பசுமையான புல்வெளியில் மேய்ப்பவரே!
இது போதும் இயேசுவே... - எனக்கு
இது போதும் இயேசுவே...
நீர் மட்டும் என் வாழ்வில் - என்றும்
இருந்தால் போதும் இயேசுவே!
சொல்லுங்க இயேசுவே... நீங்க சொல்லுங்க இயேசுவே!)