Sridevi Jayapathy

437

Muziek gemaakt door Shajay Gopi met Suno AI

Sridevi Jayapathy
v3.5

@Shajay Gopi

Sridevi Jayapathy
v3.5

@Shajay Gopi

Songteksten
Verse 1: டிசம்பர் பதினாறு, ஆம் ஆண்டு வடபழனி முருகன் கோவிலில் சந்தித்தோம். இரு குடும்பம் பார்த்த உறவாக இருந்தாலும், சில சூழ்நிலைகளால் இருவரும் "வேண்டாம்" என்று கூறி பிரியும் நிலையை மேற்கொண்டோம்.
Verse 2: ஏனோ உன் பிரிவை ஏற்க முடியாமல், என் மனம் தவித்து இருந்தது. ஜனவரி இருபத்து ஆறு ஆம் தேதி, என் பெண்மையின் உணர்வாலும், உன் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகவும், "நீ வேண்டும்" என்று கூறினேன் என் அம்மாவிடம். என் மனம் கூறியது நீயும் என் பிரிவை ஏற்கவில்லை என்று. அதுவே நம்மை இன்னைக்கும் இணைத்தது. தவறி விழுந்த என் WhatsApp அழைப்பு மறுபடியும் நம்மை இணைத்தது. உன் மறு பதிலும், நீ என் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியது.
Verse 3: "என்னை விட்டு விடாதே தேவி" என்று நீ கூறிய ஒரு வார்த்தை, உன்னை பார்க்க எனக்கு அழைப்பு விடுத்தது. நானும் அந்தப் பிள்ளையாரின் துணைக் கொண்டு உன்னை பார்க்க வந்தேன். அந்த நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று.
Verse 4: ஏப்ரல் இருபத்து இரண்டு அன்று, அனைவரும் முன்னிலையில் கைகோர்த்தோம். ஓராண்டின் பயணம், உன்னை நான் புரிந்து கொள்ளவும், என்னை நீ புரிந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்தது.
Verse 5: உன் குட்டிப் பற்களின் சிரிப்பும், நீ எனக்காக வரையும் ஓவியமும், எனக்காக பாடும் பாடல்களும் எப்போதும் நினைக்கும் இனிய நினைவுகள். நம் இரு மனம் கோர்க்கும் நாளுக்காக காத்திருக்கும் உன்னவளின் அன்பு, எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. நாம் இருவரும் வாழ்வில் இணைந்து முன்னேறி செல்வோமே.
Outro: என்னவனே, எனக்கானவனே, என் உயிரானவனே கார்த்திக்! என்றும் உன் அன்பை எதிர்நோக்கும் தேவிமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Stijl van muziek
Melody, romatic, 90's and female

Je houdt misschien van

Gerelateerde afspeellijst